வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்.. தந்தை ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி உருக்கம்!
காஞ்சிபுரம்: வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.

ராகுல் காந்தி
இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி டெல்லியிலிருந்து விமானத்தில் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரவு சென்னை தனியார் ஹோட்டலில் தங்கிய ராகுல் இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

தந்தை நினைவிடம்
அங்கு தனது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் தனது தந்தையுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி உரையாடினார். இந்த நிலையில் தனது தந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கையில், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் எனது நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும். பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். இரண்டும் இருந்தால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை யாத்திரை
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார். மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். காந்தி மண்டபத்தின் நுழைவுவாயிலில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications