உட்கார்ந்து பேசி கொண்டிருந்த 3 பேரை.. திடீரென தீ வைத்து கொளுத்திய நபர்.. குமரி அருகே பெரும் பரபரப்பு
3 பேர் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்
குமரி: உட்கார்ந்துபேசி கொண்டிருந்த 3 பேர் மீதும் திடீரென பெட்ரோலை ஊற்றி தி வைத்து கொளுத்திவிட்டார் ஒருவர்.. இந்த பரபரரப்பு சம்பவம் குமரியில் நடந்துள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ், சதீஷ், காளி... இவர்கள் 3 பேரும் இன்று சன்னதிதெரு லைப்ரலி முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென்று அந்நூலகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் ராஜசேகரன் அங்கு வந்தார்.. அவர் ஒரு கூலி தொழிலாளி.. கையில் பெட்ரோலை கொண்டு வந்திருந்த அவர், அவர்கள் 3 பேர் மீதும் மளமளவென ஊற்றி தீ வைத்து கொளுத்தியும் விட்டார்.

இதனால் அவர்கள் 3 பேரும் பதறிபோய் அலறி கொண்டு ஓடினர்.. அவர்களால் வலி பொறுக்க முடியாமல், உடம்பெல்லாம் பற்றி கொண்ட நெருப்பால் அங்குமிங்கும் அலறி ஓடினர்.. ஆனாலும் கொஞ்ச நேரத்திற்கொல்லாம் அவர்கள் உடல் வெந்துவிட்டது.
3 பேரும் உயிரோடு தீயில் அலறியதை கண்டு அங்கிருந்தோர் பதறி போய் அவர்களை காப்பாற்றினர்.. அவர்களை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸபத்திரியிலும் அனுமதித்தனர்.. 3 பேருக்கும் தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள்
விரைந்து வந்து ராஜசேகரனை கைது செய்ய வந்தனர்.. ஆனால், அதற்குள் அவர் வீட்டுக்குள் போய் கதவை உள்ளே பூட்டிகொண்டார்.. இதனால் போலீசார் கதவை உடைடத்துதான அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.. ஆனால் ராஜசேகரன் பெட்ரோலை எடுத்து போலீசாரின் மீதும் ஊற்ற வந்தார்.
பிறகு, வீட்டின் பின்பக்கம் தப்பித்து ஓடினார்.. ஆனால், ஓடும்போது அந்த பெட்ரோலை தன் மீதும் உற்றி கொண்டார்.. தீயையும் பற்ற வைத்து கொண்டார்.. இதில் தீ வேகமாக பரவியிருக்கிறது... ஆனால், அதற்குள் போலீசார் அவரை காப்பாற்றிவிட்டனர்.. ஆனால், 95 சதவீத தீக்காயம் அடைந்துவிட்டார்.. பிறகு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதித்தனர்.
இதுகுறித்து, விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் ராஜசேகரன் கோயில்களில் பூஜை செய்பவர் என்று தெரியவந்தது. இவர் பூஜை வேலை செய்வதால், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், காளி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்து வந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, காளியின் மனைவி குறித்தும் தவறான தகவல்களை மெசேஜ் மூலம் பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் இவர்களுக்குள் மோதலும் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அவமானமும், ஆத்திரமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகரித்துவிட்டதல், அவர்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் ராஜசேகரன்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications