ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வண்ணம் தீட்ட பள்ளியில் சுவரை சுரண்டிய போது திருவாங்கூர் மன்னர் கால ராஜ முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை காண மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
98 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரை அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இளைய தலைமுறையினரும் முத்திரைகளை தெரிந்து கொள்ளும் வகையில் முத்திரைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
1956 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தாலும், மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழமையான பல்வேறு கட்டிடங்கள் திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிப்பதை இன்றும் காணலாம்.

ராஜ முத்திரை
இதனிடையே நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலை பள்ளியில் பராமரிப்பு பணிகளின் போது திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையும் பிரிட்டிஷ் முத்திரையும் கண்டெடுக்கப்பட்டது.

சீரமைப்பு பணி
1921 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜாவின் 60 ஆவது பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்ட இந்த பள்ளி கோடை விடுமுறை முடிந்து சில நாட்களில் திறக்கப்படும் நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரிட்டிஷ் முத்திரை
இதுநாள் வரை மன்னர் கால பள்ளி என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளியில் சுவற்றில் வண்ணம் தீட்டுவதற்காக பணியாளர்கள் சுவரை சுரண்டும் போது திருவாங்கூர் சமஸ்தான முத்திரை மற்றும் பிரிட்டிஷ் கால முத்திரையும் தெரிந்துள்ளது. சுமார் 98 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே தெரிந்த மன்னர் கால முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை பள்ளியின் சிறப்பிற்கு கூடுதல் ஆதாரமாக அமைந்துள்ளது.

பள்ளி நிர்வாகம்
இதனிடையே பழங்கால முத்திரைகளை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக பழமை மாறாமல் வண்ணம் தீட்ட நினைத்த பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு இது குறித்த தகவல்களை தொல்லியல் துறையினருக்கும் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications