ராஜராஜ.. ராஜ மார்த்தாண்ட.. சுசீந்திரம் பள்ளிச் சுவரை சுரண்டியபோது.. கண்டெடுக்கப்பட்ட ராஜ முத்திரை
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வண்ணம் தீட்ட பள்ளியில் சுவரை சுரண்டிய போது திருவாங்கூர் மன்னர் கால ராஜ முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை காண மாணவர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
98 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரை அப்பகுதியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இளைய தலைமுறையினரும் முத்திரைகளை தெரிந்து கொள்ளும் வகையில் முத்திரைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
1956 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டம் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தாலும், மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழமையான பல்வேறு கட்டிடங்கள் திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிப்பதை இன்றும் காணலாம்.

ராஜ முத்திரை
இதனிடையே நாகர்கோவில் அருகே சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலை பள்ளியில் பராமரிப்பு பணிகளின் போது திருவாங்கூர் சமஸ்தான ராஜ முத்திரையும் பிரிட்டிஷ் முத்திரையும் கண்டெடுக்கப்பட்டது.

சீரமைப்பு பணி
1921 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜாவின் 60 ஆவது பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்ட இந்த பள்ளி கோடை விடுமுறை முடிந்து சில நாட்களில் திறக்கப்படும் நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரிட்டிஷ் முத்திரை
இதுநாள் வரை மன்னர் கால பள்ளி என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளியில் சுவற்றில் வண்ணம் தீட்டுவதற்காக பணியாளர்கள் சுவரை சுரண்டும் போது திருவாங்கூர் சமஸ்தான முத்திரை மற்றும் பிரிட்டிஷ் கால முத்திரையும் தெரிந்துள்ளது. சுமார் 98 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே தெரிந்த மன்னர் கால முத்திரை மற்றும் பிரிட்டிஷ் முத்திரை பள்ளியின் சிறப்பிற்கு கூடுதல் ஆதாரமாக அமைந்துள்ளது.

பள்ளி நிர்வாகம்
இதனிடையே பழங்கால முத்திரைகளை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக பழமை மாறாமல் வண்ணம் தீட்ட நினைத்த பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு இது குறித்த தகவல்களை தொல்லியல் துறையினருக்கும் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications