சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை... கன்னியாகுமரியில் பந்த்.. பஸ் ஓடவில்லை!
Recommended Video

நாகர்கோவில்: கேரள அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரி யதீஷ் சந்திரா என்பவருக்கும் இடையே பாஜக தொண்டர்களின் கார்களை அனுமதிப்பது தொடர்பாக, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தி யதீஷ் சந்திரா வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நிறுத்தி சபரிமலையில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்தும், ஐ.பி.எஸ். அதிகாரி யதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. முழு அடைப்பு காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். அதேபோல், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பாஜக சார்பிலான முழு அடைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications