தக்கலை மருத்துவனையில் தடுப்பூசி போடாத முன்கள பணியாளர்கள்...எலக்ட்ரீஷியனுக்கு தடுப்பூசி!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வராததால், அந்த மருத்துவமனை எலக்ட்ரீஷியனுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த கூடாது. ஆனால் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி இன்று முழுவதும் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு தலைமை அரசு மருத்துவனை மற்றும் குழித்துறை மருத்துவமனை உள்பட 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
தக்கலையில் உள்ள அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போடுவதற்காக 100 சுகாதார பணியாளர்கள் பெயர் பட்டியல் கொடுக்கபட்டு இருந்தது. இதில் 86 பேருக்கு தடுப்பூசி போடும் அறிவிப்பு வந்து இருந்தது. இந்த நிலையில் தக்கலை அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வரவில்லை.
இதனால் அந்த மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ்(32) என்பவர் தடுப்பூசி போட முன் வந்தார். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வரவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த கூடாது. ஆனால் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications