கரூரில் விஜய் செய்த தவறு.. உண்மையில் நடந்தது என்ன? போலீஸ் முதல்கட்ட விசாரணையில் ஷாக் தகவல்
கரூர்: கரூர் துயரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 12.45 மணிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேரம் தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார்.

விஜய் இந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்தது முதல் காரணம். அதாவது அவர் காலை 8.15 மணிக்கு நாமக்கல்லில் கூட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வீட்டில் இருந்தே பொறுமையாக 8.45க்குத்தான் கிளம்பினார். இதனால் மாலை கரூர் கூட்டத்திற்கு 12.45 மணிக்கு வந்துவிட்டு 1.30க்குள் கிளம்ப வேண்டியர்.. 5 மணி நேரம் கழிந்து 6 மணி அளவில்தான் வந்தார். அவர் தாமதமாக வந்ததால் மக்கள் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து.. நிறைய பேர் கூடி.. அதுவே கூட்ட நெரிசலுக்கு காரணமாக மாறியது.
தவெக விஜய்
பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர்.
விஜய் தன்னுடைய வாகனத்தின் கண்ணாடியை முன்பே இறக்கி இருந்தால்.. அவரை பார்த்த ரசிகர்கள் பலர் வெளியேறி இருப்பார்கள். ஆனால் விஜய் கண்ணாடியை மூடிக்கொண்டு வந்தார். இதனால் ரசிகர்கள் அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்று வாகனம் பின் ஓடி வந்தார்கள். இதனால் கூட்டத்தின் அளவு அதிகரித்தது. வாகனம் அருகே கூட்டம் நிரம்பியதால்.. அதுவே தள்ளுமுள்ளுவிற்கு காரணமாக மாறிவிட்டது.
விஜய் செய்த தவறு
அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர். கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை.
காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 10 ஆயிரம் பேர் வர வேண்டிய இடத்தில் போலீஸ் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கணித்து ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் வந்தது 30 ஆயிரம் பேர்.
கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான் இந்த இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் சரியாக கையாளப்படாதது, நினைத்ததை விட அதிக கூட்டம் இருந்தது இதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கரூர் துயரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications