கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே அடி.. வலிப்பு வந்து இறந்த பிளஸ் 2 மாணவன்! சாவில் முடிந்த விளையாட்டு - பர்கூரில் பரபரப்பு

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ளது கப்பல் வாடி பகுதி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் நான்கு மணியளவில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் இரண்டு மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு அடுத்து இந்தோனேசியா.. இறந்த குமரி மீனவர்! சர்வதேச நீதிமன்றத்தை நாட சொல்லும் வேல்முருகன் இலங்கைக்கு அடுத்து இந்தோனேசியா.. இறந்த குமரி மீனவர்! சர்வதேச நீதிமன்றத்தை நாட சொல்லும் வேல்முருகன்

தகராறு

தகராறு

இந்த விளையாட்டின்போது மாணவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கோபமடைந்த ஒரு மாணவன் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டு இருந்த தென்னை பாளையில் கோபிநாத் என்ற சக மாணவனை தாக்கியுள்ளார்.

வலிப்பு

வலிப்பு

இதில் படுகாயமடைந்த கோபிநாத் தாக்கப்பட்ட அதே வேகத்தில் அங்கேயே சுருண்டு கீழே விழுந்தார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டு மாணவன் கோபிநாத் துடிதுடித்து இருக்கிறார். இதனை கண்ட அங்கிருந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். உடனே அவர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மாணவன் கோபிநாத்தின் உடல் நிலையை பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மேலும் பள்ளி மாணவன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழலுக்கு வாய்ப்புள்ளதாக கூறி பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
The death of Gopinath, a class twelfth student, in a dispute between two students at Kapalwadi Government Higher Secondary School near Parkur has created a stir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X