கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெடித்த செப்டிக் டேங்க்.. விஷவாயு கசிவு..அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்.. பதற்றத்தில் ஓசூர்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஓசூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிற்பகலில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென பள்ளியில் இருந்த செப்டிங் டேங்க் வெடித்து துர்நாற்றம் வீசியது.

Hosur Govt school students faint suddenly Exploded septic tank Poisonous gas leak

இதனால் மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற மாணவர்கள் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாணவர்கள் மயக்கமடைந்த தகவல் பரவிய உடன் பெற்றோர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

செப்டிக் டேங்க் வெடித்தது எப்படி என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டி உடைந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் ஓசூரில் பள்ளி செப்டிக் டேங்க் வெடித்து விஷ வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

English summary
In Hosur, government school students had sudden vomiting and fainting spells. The unconscious students have been admitted to the hospital for treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X