வெடித்த செப்டிக் டேங்க்.. விஷவாயு கசிவு..அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்.. பதற்றத்தில் ஓசூர்
கிருஷ்ணகிரி: ஓசூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிற்பகலில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென பள்ளியில் இருந்த செப்டிங் டேங்க் வெடித்து துர்நாற்றம் வீசியது.

இதனால் மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற மாணவர்கள் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாணவர்கள் மயக்கமடைந்த தகவல் பரவிய உடன் பெற்றோர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
செப்டிக் டேங்க் வெடித்தது எப்படி என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டி உடைந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் ஓசூரில் பள்ளி செப்டிக் டேங்க் வெடித்து விஷ வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications