தொடங்கிய நுங்கு அறுவடை.. உள்ளூர்களில் களைகட்டும் விற்பனை.. ஆர்வம் காட்டும் மக்கள்!
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பல மாவட்டங்களில் நுங்கு அறுவடை தொடங்கி உள்ள நிலையில், மக்கள் ஆர்வமாக நுங்குகளை வாங்கி செல்கிறார்கள். வெளியூர் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூரில் அக்னி வெயில் சரும நோய்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட வட்டாரங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் இந்த பகுதிகளில் தான் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. அதனால் பனை நல வாரியம் தமிழக அரசு சார்பில் மத்தூர் பகுதியில் தான் ஒரு சமயத்தில் செயல்பட்டு வந்தது.

பனை மரங்களில் இருந்து பனை ஓலை பொம்மைகள், விசிறிகள், பதநீர், நுங்கு, வெல்லம் போன்ற பல பயனுள்ள பொருட்கள் கிடைப்பதால் பனை மரங்களை நம்பி இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுத் தோறும் அக்னி வெயில் தொடக்கத்தில் இயற்கை அன்னையின் கொடையாக நுங்கு அறுவடைக்கு வரும். தற்போது அக்னி வெயில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அறுவடைக்கு இந்த பகுதி மக்கள் தயாராகி அறுவடை செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு முன்பாக மரங்களில் இருந்து வெட்டி கீழே இறக்கி பதமான கனிகளை மூட்டையாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பேருந்து போக்குவரத்து இருக்கும் சமயத்தில் பல்வேறு மாவட்டங்கள், அருகில் உள்ள கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது உள்ளூர் விற்பனையை மட்டுமே நம்பி சாலையோரங்களில் கூடாரம் அமைத்து விற்பனை தொடங்கி உள்ளனர். பொது மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இதனை நம்பி உள்ளவர்கள் குறைந்த வருவாய் ஈட்டி வருகின்றனர்.
வெயில் சரும நோய்கள், உடல் சூட்டை தணிப்பது, குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் போன்ற பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கை கொடையினை ஆங்காங்கே பொது மக்கள் வாங்கி செல்வதை காண முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications