அம்மா எலிசபெத் ராணி வழியில் மக்களுக்கு சேவை- பிரிட்டன் மன்னராக பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாம் சார்லஸ்
லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று பிரகடனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிய மன்னரான மூன்றாம் சார்லஸுக்கு குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் வயது மூப்பால் காலமானார். உலகில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர் 2-ம் எலிசபெத். அவரது இறுதி நிகழ்வுகள் இன்னமும் ஒருவார காலம் நடைபெறும்.
2-ம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னரானார். மூன்றாம் சார்லஸ் என பிரிட்டனின் மன்னர் இனி அழைக்கப்படுவார். மூன்றாம் சார்லஸ், பிரிட்டன் மன்னராக இன்று அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டார். இதனையடுத்து பிரிட்டன் மரபுகளின் படி குண்டுகள் முழங்க மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சபை ஆர்ச்பிஷப் ஜஸ்டின், பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின்னர் நாட்டு மக்களுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார். மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: என் தாயார் இரண்டாம் எலிசபெத் அனைவருக்கும் முன்னுதாரணமாக, உத்வேகமாக திகழ்ந்தவர். நாங்கள் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவரது வழியில் மக்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன்.
என் தாயார் இரண்டாம் எலிசபெத் மறைவின் துயரை உங்களுடன் பகிர்கிறேன். 70 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளுடன் தொடர்பில் இருந்தார். நாங்கள் அவர் சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறோம். ஒரு ராணியாக உலகின் பல நாடுகளுக்கு என் தாயார் சேவை செய்தார். நமது மரபுகள், வரலாறு, நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ளிட்டவை தொடர்பான மதிப்ப்புகள் எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் விசுவாசமாக இருப்பேன்.
நான் மன்னராகும் இத்தருணத்தில் மகன் வில்லியம்ஸ், வேல்ஸ் இளவரசராகிறார். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் கோமகன் பதவியேற்கிறார். இத்தருணத்தில் 2-வது மகன் ஹேரி மீதான அன்பை வெளிபப்டுத்துகிறேன். என் அம்மா செய்த அத்தனைக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இவ்வாறு பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications