தமிழ் பெண்ணை அமைச்சராக்கிய விவகாரம்.. சுற்றி நின்ற எதிர்க்கட்சிகள்! தனி ஆளாக பதிலடி தந்த ரிஷி சுனக்
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரமதர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே தமிழ் பெண் சுயெல்லா பிரேவர்மேன்னை அமைச்சராக்கிய விவகாரத்தில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.
பிரிட்டன் நாட்டின் பிரமதராக இருந்த லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், அடுத்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 42 வயதான ரிஷி சுனக் நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஏற்றார். 200 ஆண்டு கால பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார்.

ரிஷி சுனக்
பிரிட்டன் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. முன்பு பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த சில தவறான முடிவுகளால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பிரதமராகப் பதவியேற்றதும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதே தனது முதல் பணி என்றும் இதற்காகக் கடினமான முடிவுகளையும் எடுக்கத் தயார் என்று கூறி இருந்தார். பதவியேற்ற நாளிலேயே முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களை நீக்கி அதிரடியும் காட்டினார்.

தமிழ் பெண்
முக்கிய துறைகளுக்கு புதிய அமைச்சர்களையும் நியமித்து வருகிறார். அப்படித்தான் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை உள் துறைக்கு அமைச்சராக (home secretary) நியமித்து உள்ளார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அமைச்சர் பதவிகள் secretary அதாவது செயலாளர்கள் என்றே அழைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதேநேரம் சுயெல்லா பிரேவர்மேன் அமைச்சராவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே அவர் லிஸ் டிரஸ் பிரதமராக இருந்த போதும் உள் துறை அமைச்சராக இருந்தவர்.

சர்ச்சை
இருப்பினும், இவர் அரசு கோப்புகளைத் தனிப்பட்ட இமெயில் மூலம் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்தது. இது பாதுகாப்பு விதிமீறல் என்பதால் எதிர்க்கட்சிகள் இவரைக் கடுமையாக விமர்சித்து இருந்தது. இதையடுத்து தனது தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது சில வாரங்கள் இடைவெளியில் சுயெல்லா பிரேவர்மேனை இப்போது ரிஷி சுனக் அமைச்சராக்கி உள்ளார்.

நாடாளுமன்றம்
இதற்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று பிரிட்டன் நாடாளுமன்ற கூடியது. ரிஷி சுனக் பிரதமராகக் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற அமர்வு இதுவாகும். இதில் சுயெல்லா பிரேவர்மேனை அமைச்சராக நியமித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், அதற்கெல்லாம் சற்றும் அசராமல் ரிஷி சுனக் தனது முடிவை நியாயப்படுத்தும் வகையில் பதில் அளித்தார்.

கேள்விகள்
அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், "பாதுகாப்பு விதிமீறலால் பதவியை ராஜினாமா செய்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்துள்ளது சரியா? சிறப்பான ஆட்சியைத் தருவேன் என்று கூறிய பிரதமராகப் பொறுப்பேற்றவர் ராஜினாமா செய்தவரை மீண்டும் அமைச்சராக்கியது தவறு. எந்தவொரு தவறுகளையும் செய்தவரைத் தான் இந்த பதவியில் நியமிக்க வேண்டும். பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ரிஷி சுனக் தேச பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளார்" என்றார்.

பதில்
இதற்குப் பதிலளித்த ரிஷி சுனக், "அவர் தெரியாமல் ஒரு தவறு செய்துவிட்டார். இருப்பினும், அதற்கு முழு பொறுப்பு ஏற்று உடனடியாக பதவியும் விலகிவிட்டார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில் எந்தவொரு தவறும் இல்லை. குற்றவாளிகளை ஒடுக்குவதிலும் நமது நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதிலும் சுயெல்லா பிராவர்மேன் கவனம் செலுத்துவார். நீங்கள் (தொழிலாளர்) எப்போதும் குற்றவாளிகளை ஒடுக்கத் தவறுவதை மறந்துவிட வேண்டாம்" என்றார்.

சுயெல்லா பிரேவர்மேன்
இதற்கு முன்பு பிரதமராக இருந்த லிஸ் டிரஸின் பொருளாதார கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தவர் சுயெல்லா பிரேவர்மேன். மேலும், ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் முதன்மையானவர் இவர் ஆவார். சுயெல்லாவின் தந்தை கோவாவைச் சேர்ந்தவர். அதேபோல அவரது தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications