‛மதுரா கிருஷ்ணஜென்ம பூமியில் கோவிலை இடித்த அவுரங்கஷீப்’.. RTI கேள்விக்கு தொல்லியல் துறை பரபர பதில்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா கிருஷ்ணஜென்மபூமியில் கேஷவ்தேவ் கோவில் முகலாய மன்னரான அவுரங்கஷீப்பால் இடிக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளது. ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை இந்த பதிலை அளித்துள்ளது.
பாபர் மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து மசூதியின் ஒருபகுதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கி உள்ளனர்.

அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் மதுரா என்பது கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு கேஷவ் தேவ் கோவில் இருந்ததாகவும், அது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கடந்த 1669-79 காலக்கட்டத்தில் இடித்து ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதியில் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எதிர் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே தான் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் இந்திய தொல்லியல் துறையிடம்(ஏஎஸ்ஐ) கேள்வி கேட்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தை சேர்ந்த அஜய் பிரதாப் சிங் இந்த கேள்வியை கேட்டார். அதன்படி இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா பிரிவு கண்காணிப்பாளர் முக்கிய தகவல்களை வழங்கி உள்ளார்.
அதில் முகலாய மன்னர் அவுரங்கஷீப் கேசவ்தேவ் கோவிலை அகற்றியது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கத்ரா மேடு நசுல் குத்தகைதாரர்களிடம் இல்லை. அதன்மீது கேஷவ்தேவ் கோவில் இருந்தது. கிருஷ்ணஜென்ம பூமியின் ஒருபகுதியான அந்த கோவில் அகற்றப்பட்டு அவுரங்கஷீப்பால் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தற்போது கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி பிரச்சனை தொடர்பான வழக்கில் இந்த தகவல் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இந்த தகவலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்களில் முன்வைப்போம் என்று கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications