மாணவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்தக்கூடாது! பட்டமளிப்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: மாணவர்கள் குறுக்குவழியை பயன்படுத்தக்கூடாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். பென்னட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பென்னட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் பேசிய அவர், “மாணவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் முழுமையாக பேசியதாவது, “இலக்கை அடைவதற்கு மாணவர்கள் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். குறுக்கு வழி மூலம் உங்களுக்கு உடனடியாக பலன்கள் கிடைக்கலாம். ஆனால் அது நீடித்து இருக்காது.
மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். உங்களுக்காக இந்த அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. நீங்கள் இங்கு கற்க வேண்டியது நேர்மை மட்டுமே. நேர்மை இருந்தால்தான் எங்கு சென்றாலும் உங்களால் தனித்து தெரிய முடியும். அதான் உங்களை அடையாளப்படுத்தும்” என்று கூறியுள்ளார். மேலும் பென்னட் பல்கலைக்கழகம் உலக தரத்தில் உயர்ந்திருப்பதாகவும், இதற்காக உழைத்த அத்துனை பேருக்கும் நன்றியை உரித்தாக்கிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசு தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய யோகி ஆதித்யநாத், அரசு எந்திரத்தில் எதிர்காலத்தில் பணியாற்ற உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications