இது உபி அவலம்! மருத்துவமனையில் பாதியில் கட்டான கரண்ட்! ஜெனெரேட்டர் இல்ல.. மொபைல் டார்ச்சில் சிகிச்சை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மொபைல் டார்ச் லைட் கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மருத்துவ வசதிகளை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் எப்போதும் மிகவும் மோசமான நிலையில்தான் இருந்து வருகிறது.
கடந்த மூன்றாண்டு கால தகவலின் அடிப்படையில் இந்தியாவில் மிக மோசமான பொது மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசமும், ராஜஸ்தானும்தான் முதலிடத்தில் உள்ளன.

மின்வெட்டு
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மொபைல் போன் டார்ச் லைட்டுகளை கொண்டு சிகிச்சையளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமிருக்கின்றன. பலியா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததையடுத்து அங்குள்ள இந்த மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மொபைல் டார்ச்
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில், ஒரு பெண்ணை மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வருகிறார்கள். அப்பெண்ணிற்கு என்ன ஆயிற்று என்பதை காண மருத்துவர் ஒருவர் செல்போன் டார்ச் மூலம் ஆராய்கிறார். இந்த காட்சிகள் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

விளக்கம்
அதேபோல மற்றொருபுறம் நோயாளிகள் இருளில் அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது என்றும், ஆனால் அதற்கான பேட்டரிகளை கொண்டு வந்து பொருத்தி பின்னர் மின்சார இணைப்பு கொடுப்பதற்கு 15-20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது என்றும் மாவட்ட மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர் டாக்டர் ஆர்.டி.ராம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

மாநில நிலைமை
ஜெனரேட்டரில் பேட்டரி இல்லாமல் இருப்பது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பேட்டரிகள் அதிகம் திருடுபோகும் அபாயம் உள்ளதால் அதனை தனியே எடுத்து வைத்திருக்கிறோம்" என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். மேற்குறிப்பிட்டதைப்போல இம்மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் வெகு சாதாரணமாக நடைபெறுகின்றன. இதுகுறித்து தொடர் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications