உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத் வசிக்கும் மடம் எப்படிப்பட்டது?.. மக்களிடம் கூற தயாரா?.. மாயாவதி சவால்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும்பாலான நேரங்களில் தங்கும் மடம் பெரிய பங்களாவை குறைவானது இல்லை என்பது குறித்து மாநில மக்களுக்கு அவர் கூற வேண்டும் என முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. இதையடுத்து பிப்ரவரி 14, 20, 23, 27, மார்ச் 3, 7 என தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. அது போல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சியை பிடிக்க போராடி வருகின்றன.

எதிர்க்கட்சிகள்
உ.பி. மாநிலத்தில் வேலையின்மை, தலித்துகள் மீதான தாக்குதல், பசு வதை தடை சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை எதிரொலிக்கும் என தெரிகிறது. இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
தங்கள் பிரச்சாரங்களை விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் மீது லக்கிம்கேரியில் கார் ஏற்றிய விவகாரம், உன்னவ் பலாத்கார வழக்கு, ஹத்ராஸ் பலாத்கார வழக்கு உள்ளிட்டவை எதிரொலிக்கும் என தெரிகிறது. மேலும் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. ஆன்லைன் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

யோகி ஆதித்யநாத்
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மாயாவதி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், யோகி ஆதித்யநாத் அவர் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் ஒரு பெரிய மடம் உள்ளது. இங்குதான் பெரும்பாலான நேரங்களில் தங்குவார். மடம் என்றால் சாதாரணமாக இருக்காது. அதே நேரம் பெரிய பங்களாவுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.

யோகியின் மடாலயம்
இது குறித்து உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மக்களுக்கு தெரியாது. இதை யோகி ஆதித்யநாத் மாநில மக்களுக்கு சொன்னால் சிறப்பாக இருக்கும். ஒரு முதல்வர் தனது ஆட்சிக் காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து கூற வேண்டும். ஸ்ரீ கன்ஷிராம் ஜி சஹாரி கரீப் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்த போது நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளது. இரு கட்டங்களாக ஒன்றரை லட்ச வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நிலமில்லாத லட்சக்கணக்கானவர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன என்றார் மாயாவதி.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications