வினையான திருடன்-போலீஸ் விளையாட்டு.. துப்பாக்கியால் சுட்ட பாஜக பிரமுகரின் மகன்.. 11 வயது சிறுவன் பலி
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் திருடன் போலீஸ் விளையாட்டின்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளரின் மகன் பொம்மை துப்பாக்கி என நினைத்து உண்மையான கைத்துப்பாக்கியால் சுட்டதில் 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் இருக்கும்போது அவர்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மட்டுமின்றி லைசென்ஸ் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது. இருப்பினும் சில வீடுகளில் பெற்றோர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இதனால் தங்களின் குழந்தைகள் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் லைசென்ஸ் கைத்துப்பாக்கியை சிறுவனின் கைக்கு கிடைக்கும்படி பாஜக தலைவர் வைத்த நிலையில் அது ஒரு சிறுவனின் உயிரை பறித்துள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

பாஜக பொதுச்செயலாளரின் மகன்
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி அருகே கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் பாஜக மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் அவரது மகன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடினார்.

திருடன் போலீஸ் விளையாட்டு
சிறுவர்கள் அனைவரும் இணைந்து 'திருடன் போலீஸ்' விளையாட்டு விளையாடினர். இந்த வேளையில் வீட்டுக்கு சென்ற சஞ்சயின் மகன் வீட்டுக்கு சென்று தந்தையின் பாதுகாப்புக்காக வாங்கி வைத்திருந்த லைசென்ஸ் கைத்துப்பாக்கியை எடுத்துள்ளார். இதனை வீட்டில் இருந்தவர்கள், விளையாடிய சிறுவர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இந்த வேளையில் திருடன் போலீஸ் விளையாட்டின்போது அந்த துப்பாக்கியை வைத்து சுடுவது போல் சஞ்சயின் மகன் ஆக் ஷன் செய்தான்.

குண்டு பாய்ந்து இறந்த சிறுவன்
அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி திடீரென்று சுட்டது. இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேதாந்தா (11) என்ற சிறுவன் மீது பாய்ந்தது. இதில் குண்டு பாய்ந்த சிறுவன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். வேதாந்தாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார்.

பொம்மை துப்பாக்கி என நினைத்து..
இதுபற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பொம்மை துப்பாக்கி என நினைத்து தான் சஞ்சயின் மகன் அதனை எடுத்து சுட்டதும், தோட்டா லோட் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி











Click it and Unblock the Notifications