சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்.. என்ன செய்யப்போகிறார் அகிலேஷ் யாதவ்? அடுத்தடுத்த திருப்பங்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், சமாஜ்வாதி கூட்டணியில் இருக்கும் அப்னா தளத்துக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

சமாஜ்வாதி கட்சி
ஆனால் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர் போட்டியைக் கொடுத்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலில் பாஜக-விடம் தோல்வியைத் தழுவியது. அதற்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குடும்ப கட்சி, ஜாதி அரசியல் உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த தேர்தலில் சமாஜ்வாதி தோற்றது.

அகிலேஷ் யாதவ்
கடந்த தேர்தலில் செய்த தவறுகளை மாற்றிக்கொண்டு, இந்த தேர்தலில் குடும்பத்தினருக்கு அதிக இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார் அகிலேஷ் யாதவ். அதே சமயம் பாஜக-வில் இருந்த பல ஒபிசி தலைவர்களை சமாஜ்வாதிக்கு அழைத்து வந்தார் அகிலேஷ் யாதவ். இது பாஜகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது.

கூட்டணி
பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாக அனுப்பிரியா படேலின் அப்னா தளம் விளங்குகிறது. இதிலிருந்து பிரிந்துவந்த அனுப்பிரியாவின் தாயார் கிருஷ்ணா படேல் அப்னா தளம் (கமரவாடி) என்ற கட்சியை நடத்திவருகிறார். உத்தரப்பிரதேச தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியாக கருதப்படும் அப்னா தளத்தால்(கமராவடி) சிக்கல் நிலவி வருகிறது. கூட்டணியில் தொடருமா அல்லது வெளியேறுமா என்பது இன்று அகிலேஷ் யாதவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் தெரியவரும்.

போட்டி
உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா போட்டியிடும் சிரத்து தொகுதியில், சமாஜ்வாதி சார்பாக பல்லவி படேல் களமிறங்கியுள்ளார். இந்த அறிவிப்பு அந்தத் தொகுதியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. அவர் எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவார் என்று இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பல்லவி படேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஜகவின் துணை முதல்வருக்கு எதிராக போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications