விவசாயிகள் படுகொலை- ராகுல் தலைமையிலான குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது- உ.பி. அரசு அனுமதி மறுப்பு!
லக்னோ: உ.பி.யில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது. ஆனால் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு உத்தரப்பிரதேச மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
Recommended Video
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ளது. உ.பி.யின் லக்கிம்பூர் கேரியில்(லக்கிம்பூர் கெரி) விவசாயிகள் பாஜகவினருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது அந்த கூட்டத்துக்குள் காரை வேகமாக ஓட்டி ஏற்றியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா மகன்
விவசாயிகள் கூட்டத்துக்குள் காரை ஏற்றி கொலை செய்தது மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனை அஜிஸ் மிஸ்ரா தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ஆனால் உ.பி. போலீசார் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரியங்கா கைது
இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்ட அறிக்கையில், தாம் கைது செய்யப்பட்டதாக செல்போனில்தான் தெரிவித்தனர். எப்.ஐ.ஆர். நகலை காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், பெண்களை சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னரும் சூரியன் உதயத்துக்கு முன்னரும் கைது செய்யக் கூடாது. ஆனால் பிரியங்கா காந்தி அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என சாடியிருந்தார்.

ராகுல் தலைமையிலான குழு
இந்நிலையில் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று அங்கு செல்கிறது. இதற்காக உ.பி. அரசிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் உ.பி. அரசு, காங்கிரஸ் குழு லக்கிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 3-ந் தேதி வன்முறையைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறுபிரதேச பரிசோதனை கோரிக்கை
இருப்பினும் தடையை மீறி ராகுல் காந்தி தலைமையிலான குழு லக்கிம்பூர் செல்ல முயற்சிக்கும். இதனால் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனிடையே காரை ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர், மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications