ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் முடித்த பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார்
Recommended Video
தீரன் அதிகாரம் ஒன்று- நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம். வட இந்தியாவின் பவேரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய தீரனாக கார்த்தி நடித்து வெளிவந்த படம் இது.
தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தை 30 ஆண்டுகளாக கலக்கி வந்த ரவுடி விகாஸ் துபே கும்பலின் கதையை ஒட்டுமொத்தமாக முடித்து வைத்திருக்கிறது கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் தலைமையிலான போலீஸ் படை. இந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் ஒரு தமிழர்.

8 போலீஸ் படுகொலை
கான்பூரில் விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற போது 8 போலீசார் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதில் இருந்து விகாஸ் துபேவின் இறுதி அத்தியாயம் தொடங்கிவிட்டது. விகாஸ் துபேவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் முடிக்கப்பட்டுவிட்டனர். கடைசியாக இருந்தது விகாஸ் துபேதான்.

ம.பி.யில் கைது
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவில் ஒன்றில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை சுற்றி வளைத்து தூக்கியது போலீஸ். அதேநேரத்தில் கான்பூரில் விகாஸ் துபேவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் தூக்கி சிறையில் அடைத்தது போலீஸ். இரவோடு இரவாக ம.பி.யில் இருந்து விகாஸ் துபேவுடன் புறப்பட்டது போலீஸ் டீம்.

என்கவுண்ட்டரில் சுட்டு கொலை
இன்று காலை மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவுடன் வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபே, என்கவுண்ட்டரில் பலியானார். இந்த என்கவுண்ட்டரை வெற்றிகரமாக நிகழ்த்தியது எஸ்.பி தினேஷ்குமார், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர்.

சேலம் அதிகாரி
பி.எஸ்.சி. அக்ரி படிப்பை முடித்து ஐ.பி.எஸ். அதிகாரியான தினேஷ்குமார், 2009-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த 33 வயதான இளம் அதிகாரி. விகாஸ் துபே என்கவுண்ட்டர் மூலம் நிஜத்தில் ஒரு 'தீரனாக ' உயர்ந்து நிற்கிறார் தினேஷ்குமார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications