காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.. விஜய்யின் கத்தி பட டயலாக்கை பேசிய எடப்பாடி பழனிசாமி!
மதுரை: என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக காற்றில் கூட ஊழல் செய்த கட்சி என்று விஜய் பேசிய டயலாக்கை பேசி விமர்சித்துள்ளார்.
மதுரையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நம் கூட்டணி 201 தொகுதிகளிலும் வென்று அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.

234 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் வென்று, அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல் உழைக்க வேண்டும். நமக்கு எதிரான உள்ள கூட்டணி இதுவரை தேர்தல் பிரச்சாரத்தை கூட தொடங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை மோடி ஒதுக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு என்ன நிதி கொடுத்தீர்கள்? என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா? 15 ஆண்டு கால மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுகவால் தமிழ்நாட்டிற்கு என்ன கிடைத்தது? காற்றில் கூட 2ஜி மூலமாக ஊழல் செய்த கட்சி தான் திமுக.. மத்தியில் அமைச்சரவையில் இருந்தாலும் கூட ஊழல் செய்துள்ளது.
ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். இம்முறை திமுக ஆட்சியை அகற்ற தொண்டர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கத்தி படத்தில் விஜய், 2ஜினா என்ன.. அலைக்கற்றை.. காற்றிலேயே கோடி கணக்குல ஊழல் செய்த ஊருயா இது என்று வசனம் பேசி இருந்தார். அதனை எடப்பாடி பழனிசாமியும் பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications