Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுவராஜ் கருணை மனு கூட போட முடியாது! கண்ணகியின் மதுரையில் கோகுல்ராஜுக்கு நீதி! அரசு வழக்கறிஞர் மோகன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ‛‛கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்ணகி நீதி கேட்டு போராடிய மதுரையில் பட்டியலின இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளது'' என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா மோகன் கூறினார்.

Recommended Video

    Gokulraj Mother Speech | திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் இந்த தண்டனையாவது கிடைத்தது

    சேலம் மாவட்டம் ஓமலூர் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். 2015ல் கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

     10 பேர் குற்றவாளிகள்

    10 பேர் குற்றவாளிகள்

    நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. பிறகு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. மார்ச் 5ல் வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார், சதீஷ் குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆனதாக நீதிமன்றம் தெரிவித்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் இருவருக்கும் 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குமார், சதீஷ் குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோர்கு 5 ஆண்டு கடுங்ககாவல் சிறையும் விதிக்கப்பட்டது.

    நீண்ட போராட்டத்துக்கு பின்

    நீண்ட போராட்டத்துக்கு பின்

    இதுதொடர்பாக அரசு தரப்பு வக்கீல் பவானி பா மோகன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: ‛‛கோகுல்ராஜ் முதலில் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. உடற்கூறு ஆராய்வில் கொலை என்பது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக யுவராஜ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கோகுல் ராஜ் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்க அவரது தாய் சித்ரா கோரினார். கோகுல்ராஜை 9 மணிநேரம் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    கருணை மனுவுக்கு அனுமதியில்லை

    கருணை மனுவுக்கு அனுமதியில்லை

    அரிதிலும் அரிதான வழக்கு என கோர்ட்டில் கூறினோம். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதலாவதாக கொலை செய்தல், பட்டியல், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் ஒரு ஆயுள் தண்டனையாகும். இதில் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும். இதற்கு 5 ஆயிரம் அபராதமாகும். 2வதாகாக குற்ற சதி செய்து பட்டியல் இனத்தவரை கொலை செய்ததாக இன்னொரு ஆயுள் தண்டனையும், 3வதாக ஆட்கடத்தி கொலை செய்ததால்மற்றொரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

     கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...

    கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...

    இதன்மூலம் சாகும் வரை அவர் சிறையிலேயேஇருக்க வேண்டும். பிணையில் வர முடியாது. வன்கொடுமை சட்டம் பிரிவு 360 பிரகாரம் கருணை மனுவுக்கும் அனுமதியில்லை. எதிர்காலத்தில் கருணை கொலைகளை தடுக்க இந்த தீர்ப்பு பயன்படும். கண்ணகி நீதி கேட்டு போரடிய மதுரையில் பட்டியலின இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளது'' என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+