குன்றம் காக்க கோவிலை காக்க! மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு இந்து முன்னணி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டியில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் உள்ள ரஜினிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 ஆம் தேதி "குன்றம் காக்க, கோவிலை காக்க" என்ற முருக பக்தர்களின் மாநாடு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியை இந்து முன்னணி அமைப்பு அணுக முடிவு செய்தது.

இதற்காக ரஜினியை சந்தித்து அவருக்கு மாநாட்டு அழைப்பிதழை கொடுத்துள்ளனர். அவர் தற்போது கேரளாவின் ஆனைக்கட்டியில் சோலையூர் பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் கூலி பட ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்றுள்ளார்.
அங்கு 40 முதல் 45 நாட்கள் ஷூட்டிங் என சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி தலைமையில் சோலையூர் பகுதிக்குச் சென்று நடிகர் ரஜினியை சந்தித்தனர். பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்களை கொடுத்தனர்.
இதுகுறித்து கார்த்தி கூறுகையில், தொடர்ந்து முயற்சிகள் செய்த நிலையில் அவரை ஆனைக்கட்டி பகுதியில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்துவிட்டோம். கட்டாயம் வருவதாக தெரிவித்தார். அவர் முருக பக்தர் என்பதால் வருவார் என நம்புவதாக கார்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications