“உறுதியா இருக்கேன்..” பின்வாங்காத சவுக்கு சங்கர்! நீதித்துறையில் ஊழலா? ஐகோர்ட் நீதிபதிகள் முன்பேச்சு
மதுரை: நீதித்துறையில் ஊழல் படித்திருப்பதாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள், காவல்துறை, நீதித்துறை, அரசியல் கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். யூடியூப் பேட்டிகள் மூலமாக சமூக வலைதளங்களில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவை தொடர்ந்து "திமுக ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?" என்று கேள்வி எழுப்பி சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார்.
இதனை அடுத்து 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்திடக்கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
இதனை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர், "மாரிதாஸ் வழக்கை விசாரித்தபோது அழகர் கோயிலில் காலை 6 மணிக்கு யாரை சந்தித்தீர்கள்?" என்று ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார். அடுத்த சில நாட்களில் ஒரு யூடியூப் சேனலில் நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாகவும் அவர் பேசி இருந்தார்.
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், பதில்மனு தாக்கல் செய்திட கால அவகாசம் கோரினார்.
எதன் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோ அந்த வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "நீங்கள் கேட்கும் வீடியோக்கள் உங்களிடமும் இருக்கும். நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக நீங்கள் தெரிவித்த கருத்து உண்மையானதா?" என்று கேள்வி எழுப்பினர்.
உடனே சவுக்கு சங்கர் தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். வேறு வழக்கறிஞர்களை வைத்து வாதாடினால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும் சூழல்நிலை ஏற்படும் என்பதால் தானே வாதாட விரும்புவதாக விளக்கமளித்தார். சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞரை நியமிக்க விருப்பம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தன்னுடைய சார்பில் என்.ஆர்.இளங்கோவனை நியமிக்க விரும்புவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications