பெற்றோர் இல்லை.. தஞ்சம் தந்த மாமா, அத்தை! மதுரை மாணவியின் பிறப்புச் சான்றிதழில் இணைந்த அந்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு, தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், சட்டத்தின் மனிதாபிமான முகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, தனது வாழ்நாளில் சந்தித்த மிகப்பெரிய அடையாளப் போராட்டத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் ஒரு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது. பெற்றோர் இல்லாத நிலையிலும், தன்னை பாசத்தோடு வளர்த்த உறவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தேடித்தந்த அந்த மாணவியின் முயற்சிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் ஒரு சோகமான, அதே நேரத்தில் நெகிழ்ச்சியூட்டும் கதை ஒளிந்துள்ளது. மதுரையை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட, தாயும் அவரை கைவிட்டுச் சென்றுள்ளார்.

Madurai High Court birth certificate case

ஆதரவற்ற நிலையில் தவித்த அந்த குழந்தையை, அவரது தந்தைவழி மாமாவும் அத்தையும் தத்தெடுத்து, தங்கள் சொந்த மகள் போல வளர்த்துள்ளனர். தங்களின் அரவணைப்பில் அந்தப் பெண்ணை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். அந்த மாணவியின் பள்ளிச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் அனைத்திலும் பெற்றோர் என்ற இடத்தில் அந்த மாமா மற்றும் அத்தையின் பெயர்களே அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தன.

பிறப்பு சான்றிதழ் - விரிவான விசாரணை

இருந்தாலும் அவரது உண்மையான பிறப்புச் சான்றிதழில் இந்த மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் எதிர்காலத்தில் அரசு ஆவணங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த மாணவி, தனது பிறப்புச் சான்றிதழிலும் தன்னை வளர்த்த மாமா மற்றும் அத்தையின் பெயர்களை சேர்க்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ரத்த சொந்தங்கள் கைவிட்ட நிலையில், தஞ்சம் கொடுத்த வளர்ப்பு பெற்றோருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய இந்த மனு, நீதிமன்றத்தில் மிக விரிவான விசாரணைக்கு வந்தது.

இந்த உணர்வுப்பூர்வமான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மனிதாபிமானம் மிக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாமா, அத்தை - பிரமாண பத்திரங்கள்

ஒரு குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்கும் உரிமையை மதிப்பது என்பது வெறும் அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து உரிய உதவிகளையும் தார்மீக அடிப்படையில் வழங்குவதும் அரசின் மிக முக்கியக் கடமையாகும் என்று நீதிமன்றம் மிகவும் ஆழமாகத் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்படுமாறு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளருக்கு அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, மாணவியின் மாமா மற்றும் அத்தை ஆகியோர் தங்களது வளர்ப்பு முறை குறித்த நோட்டரி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

பெயருக்கு பின்னால் வளர்ப்பு

அந்த பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் எந்தவித தாமதமும் இன்றி, பிறப்புச் சான்றிதழின் உரிய பத்திகளில் அவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும். குறிப்பாக, அந்தப் பெயர்களுக்குப் பின்னால் 'வளர்ப்பு' (Foster) என்ற பின்னொட்டை இணைத்து, புதிய சான்றிதழை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்தின் கடுமையான விதிகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு பெண்ணின் எதிர்கால நலன் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+