குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு
மதுரை: மதுரையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய கணவர் கார்த்திக்பாண்டியன். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளனர்.
திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். ஆனால்
கணவர் கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தகராறு
இதன் காரணமாக குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை நடத்த முடியாத சூழல் எற்பட்டது. ''நீங்கள் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும்'' என்று திலகவதி, கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்துள்ளது.

மனவேதனை
இதனால் திலகவதி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். தனது ஒரு வயது ஆண் குழந்தையை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்கொலை செய்து விடுவோம் என்ற விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார். பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் சென்று அமர்ந்துள்ளார்.

தற்கொலை முயற்சி
பின்னர் தான் கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெப்பக்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர்களான செந்தில் மற்றும் வெங்கடேஷ்பாபு இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

காப்பாற்றியுள்ளனர்
உடனடியாக ஓடிச்சென்ற அவர்கள் திலகவதி மற்றும் பெண் குழந்தையை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். திலகவதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாராட்டு
துரிதமாக செயல்பட்டு தற்கொலையை தடுத்து நிறுத்தி இருவரின் உயிரை மீட்ட காவலர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டி சென்றனர். தற்கொலை எதற்கும் மருந்து ஆகாது. வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications