"டைம்" கேட்ட சவுக்கு சங்கர்! ஏற்கனவே ஒத்திவைத்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது! பரபர மதுரை
மதுரை: கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை இன்று மதுரை கோர்ட்டில் நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் யாருமே ஆஜராகவில்லை...
ஆவணங்கள்: கோவையில் இன்னொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலும் சவுக்கு சங்கர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். இந்த மனு மீதான விசாரணையைதான் இன்று 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
எதிர்பார்ப்பு: அதன்படி, இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications