28.06 லட்சம் பேருக்கு வேக்சின்.. மக்களின் ஆர்வம்தான் இதற்கு காரணம்.. அமைச்சர் மா.சு பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மெகா முகாம்கள் மிகச்சிறப்பாக வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் நன்றி. அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்த முகாம் வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்கள்.

TN Minister Ma. Subramanian has said that the interest of the people is the reason for vaccinating 28.06 lakh people in a single day in Tamil Nadu

தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை என பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் நேரடியாக சென்று முகாம் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தோம் அதில் மக்கள் விறுவிறுப்பாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கு பொதுமக்கள் இடையே ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம். முதல்வர் கடந்த ஒரு வாரமாக ஆலோசனைகள் கூறிய வழிகாட்டுதலின்படி செயல்பட்டோம்

ஆனால் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இருபத்தி ஆறு லட்சத்து 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இது ஒரு மிகப்பெரிய சாதனை.இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரம் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று நடந்த சிறப்பு முகாம் மூலம் 26 ஆயிரத்து 11,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரம் பேர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 754 மாவட்டங்களில் 100 சதவித தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளது.

மக்கள் தன்னார்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர் சில இடங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம் கூடுதலாக வந்தவர்கள் நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளோம் மலை கிராம பகுதிகளான தர்மபுரி கிருஷ்ணகிரி பகுதிகளில் மக்கள் தன்னார்வம் இல்லை. அப்பகுதிகளில் தன்னார்வமாக செயல்பட முகாம்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வுபடுத்த அறிவுறுத்தியுள்ளோம்

நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படையாக கூறி இருக்கிறோம். நீட் தேர்வு குறித்து மக்கள் கருத்துக்களை பெற ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் நாளை தீர்மானம் நிறைவேற்றி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+