உங்களின் பொன்னான வாக்குளை பதிக்க... பாதுகாப்போடு புறப்பட்டன வாக்கு இயந்திரங்கள்
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளும் வருகிறது. ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டத்தில் சுமார் 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் சுமார் 15லட்சத்து 38ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதுதவிர விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மற்றும திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதியில் மட்டும் சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

5438 வாக்கு எந்திரங்கள்
மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடக்க 2719 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடப்பதற்காக, 5438 வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் தற்போது 1549 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதவின் மீது வாக்கு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், அவற்றை சமாளிக்க கூடுதலாக உள்ள இந்த 20 சதவீத எந்திரங்கள் உதவும்.

6500 போலீசார் பாதுகாப்பு
மதுரை மாவட்டத்தில் 13,533 வாக்கு சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்னர். மதுரை மாவட்டத்தில் 792 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2500 போலீசார், துணை ராணுவத்தினர் உள்பட 6500 போலீசார் ஈடுபட உள்ளார்கள்.

மாசி வீதிகளில் வாக்குச்சாவடி
மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். தேரோட்டம் நடைபெறவுள்ள 4மாசிவீதிகளில் உள்ள 4 மாசி வீதிகளில் 53 வாக்குச்சாவடிகளும், கள்ளழகர் எதிர்சேவை நடைபெறக்கூடிய புதூர், மூன்றுமாவடி, சூர்யாநகர் 59 வாக்குச்சாவடிகளும் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் வாக்குபதிவை கண்காணிக்க நுண்பார்வையாளர் ( Micro Observer) 292பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜி.பி.எஸ் கருவி
மதுரை மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்படும் . மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற 269 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது, இவர்களுக்கான 269 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துப்பட்டுள்ளது. இதுதவிர வாக்கு பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications