5 முறை லோக்சபா எம்.பி... உடுப்பி சிங்கம்... காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்!
மங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் (வயது 80) முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். கர்நாடகாவின் உடுப்பியில் 1941-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அப்போது உடுப்பி மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்தது. ஆஸ்கர் பெர்னாண்டஸுடன் பிறந்தவர்கள் 12 பேர்.

1972-ம் ஆண்டு உடுப்பி மாநகராட்சி கவுன்சிலராக அரசியல் பயணத்தை தொடங்கினார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். உடுப்பி லோக்சபா தொகுதியில் இருந்து 1980-ம் ஆண்டு முதன் முதலாக எம்.பி.யாக வென்றார். அதன் பின்னர் 1984,1989,1991, 1996 என லோக்சபா தேர்தல்களிலும் உடுப்பியில் போட்டியிட்டு வென்றார். உடுப்பியில் மொத்தம் 5 முறை ஒரே தொகுதியில் வென்று எம்.பி.யானார்.
1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் டாக்டர் வி.எஸ். ஆச்சார்யாவை தோற்கடித்தார். 1984-ல் 62% வாக்குகள் பெற்று பாஜகவின் கே.எஸ்.ஹெக்டேவை தோற்கடித்தார். 1989-ல் ஜனதா தளத்தின் எம்.சஞ்சீவா, 1991-ல் பாஜகவின் ருக்மய்யா புஜாரி 1996-ல் பாஜகவின் ஜெயராம ஷெட்டி ஆகியோரை தோற்கடித்தார். ஆனால் 1998-ல் பாஜகவின் ஜெயராம் ஷெட்டியிடம் தோல்வி அடைந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், அதன்பின்னர் தேர்தலிலேயே போட்டியிடவில்லை.
1998-ல் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டும் ராஜ்யசபா எம்.பி.யானார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பணியாற்றினார். சோனியா காந்தி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மிக முக்கியமானவர். நேரு குடும்பத்தின் மிக மிக நம்பிக்கைக்குரியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு டெல்லி மேலிட பிரதிநிதியாக ஆஸ்கர் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
2010-ம் ஆண்டு மங்களூரு பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதியன்று யோகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். இதன் காரணமாக மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சுயநினைவை இழந்தார் அவர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications