கை கோர்க்கும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்.. மகாராஷ்டிராவில் லோக் சபா கூட்டணி முடிவானது!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இப்போதே பல மாநிலங்களில் தேர்தல் கூட்டணிகள் முடிவாகிவிட்டது. முக்கியமாக பீகார் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களில் கூட்டணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனியாக நிற்கிறது. பாஜக தனது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உத்தர பிரதேசத்தில் நிற்கிறது. மாறாக பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி உத்தர பிரதேசத்தில் பெரிய கூட்டணி அமைத்துள்ளது.

பீகார் என்ன?
அதேபோல் பீகாரில் லோக் சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அங்கு காங்கிரசின் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆர்எல்எஸ்பி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா முக்கியம்
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. நேற்று நடனடஹ் ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.48 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்களை ஒதுக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டு இருக்கிறது.

எத்தனை இடங்கள்
எத்தனை இடங்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் இடம் எத்தனை பகிரப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் சில சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இந்த கூட்டணி தெரிவித்துள்ளது.

ஆரம்பம்
இந்த கூட்டணி முடிவாகிவிட்டதாகவும், சிறிய கட்சிகள் வந்தால், தேசிய வாத காங்கிரஸ் தனது இடத்தில் சிலவற்றை கொடுக்கும் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக தற்போது தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா மிக முக்கியமான மாநிலம் என்பதால் காங்கிரஸ் அங்கு முதல் ஆளாக கூட்டணியை அறிவித்துள்ளது. இதனால் பாஜகவும் விரைவில் அங்கு கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications