'மும்பையில் 3% டைவர்சுக்கு காரணமே டிராபிக்தான்'.. பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி கலகல!
மும்பை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களை போன்று இந்தியாவின் நெருக்கடி மிகுந்த நகரமாக விளங்கும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக இருக்கிறது.
Recommended Video
இங்கு காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து வாகனங்களில் செல்வது என்பது இமயமலை சிகரத்தில் ஏறுவது போன்றதாகும். இந்த நிலையில்தான் மும்பையின் போக்குவரத்து நெரிசல் குறித்து கலகலப்பாக கூறியுள்ளார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ்.

3% சதவீத டைவர்சுக்கு இதுதான் காரணம்
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், மும்பையில் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக காணப்படுகிறது. மும்பையில் 3% சதவீத திருமண விவாகரத்துகள் (டைவர்ஸ்) கடும் போக்குவரத்து நெரிசல்(ஃடிராபிக்) காரணமாக நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி விடுவதால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது.

ஒரு பெண்ணாக உங்களுடன் பேசுகிறேன்
இதனால் குடும்பங்களில் விவாகரத்து ஏற்படுகின்றன. நான் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி என்பதை மறந்து விடுங்கள். நான் ஒரு பெண்ணாக உங்களுடன் பேசுகிறேன். மும்பை சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மக்களை எவ்வாறு தொந்தரவு செய்கின்றன என்பதை நான் நேரடியாகவே பலமுறை அனுபவித்திருக்கிறேன்'' என்று அம்ருதா ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

சிவசேனா பதிலடி
அம்ருதா ஃபட்னாவிவின் இந்த வினோதமான கருத்துக்கு சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '3% மும்பைவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய இந்த பெண்ணுக்கு (அம்ருதா ஃபட்னாவிஸ்) இந்த நாளின் சிறந்த (IL) லாஜிக் விருது வழங்கப்படுகிறது.

பெங்களூர் குடும்பங்கள் தயவு செய்து படிக்காதீர்கள்
பெங்களூர் குடும்பங்கள் தயவு செய்து இதை படிப்பதைத் தவிர்க்கவும், அது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்' என்று பிரியங்கா சதுர்வேதி ஸ்மைல் ஈமோஜியுடன் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலில் மும்பைக்கு கொஞ்சம் கூட சளைத்தது அல்ல பெங்களூர். காலை, மாலை வேளைகளில் டிராபிக்கால் பெங்களூருவாசிகள் படாதபாடு பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications