Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்த நாள் பரிசு.. ஆர்யன் கான் விடுதலையால் பூரிப்பில் ஷாருக் கான்! வழக்கறிஞர்கள் குழுவுடன் 'க்ளிக்'

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். மகன் ஆர்யன் கானுக்கு போதை மருந்து வழக்கில் கோர்ட் ஜாமீன் வழங்கியதுதான் இதற்கு காரணம்.

சொகுசு கப்பல் விருந்தில் வைத்து ஆர்யன் கான் போதை மருந்தை பயன்படுத்தியதாகவும் கடத்தல் சதி என்றும் குற்றம்சாட்டப்பட்டு ஆர்யன் கான் 21 நாட்கள் மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக 21 நாட்கள் கழித்து 3வது ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு பிறகுதான் ஜாமீன் கிடைத்தது.

இந்த சட்டப் போராட்டத்தில் கிடைத்த இடைக்கால வெற்றியின் பூரிப்பு ஷாருக்கான் குடும்பத்தில் எல்லோருடைய முகங்களிலும் நேற்று முதலே எதிரொலித்து வருகிறது.

 பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது வீட்டில் கொண்டாட்ட சூழல் நிலவி வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கின் பிறந்தநாள் வருகிறது. ஆர்யனின் விடுதலை அவருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கப்போகிறது. தனது பிறந்த நாள் மற்றும் தீபாவளிக்கு மகன் தன்னோடு இருக்கப்போவதை நினைத்து ஷாருக்கான் மகிழ்ச்சியிலிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மகிழ்ச்சியை வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் பகிர்ந்து கொண்டார்.

தாய் சபதம்

தாய் சபதம்

ஆர்யனின் ஜாமீன் மூலம் அவரது தாய் கவுரி சபதம் நிறைவேறியுள்ளது. ஆர்யன் கான் விடுதலையாகி வீட்டிற்கு வரும் வரை இனிப்பு சாப்பிட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார் கவுரி கான். எனவே, நவராத்திரி நேரத்தில் வீட்டில் இனிப்பு பாயாசம் செய்ய வேலைக்காரர்களுக்கு கவுரி தடை போட்டிருந்தார். இப்போது கணவர் பிறந்த நாள், தீபாவளி என வரிசையாக கொண்டாட்ட தினங்களில் தனது மகன் தன்னோடு இருக்கப்போவது அவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

வழக்கறிஞர் குழு

வழக்கறிஞர் குழு

கோர்ட் உத்தரவு வந்ததும் நேற்று மாலை ஷாருக்கான், தனது வழக்கறிஞர் குழுவான சதீஷ் மனேஷிண்டே மற்றும் அவரது டீமுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மனேஷிண்டே இதுபற்றி கூறுகையில், கோர்ட் உத்தரவு வந்ததும் ஷாருக்கான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவரது சட்டப் போராட்டத்திற்கு பலன் கிடைத்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜாமீனில் விடுதலை

ஜாமீனில் விடுதலை

ஆர்யன் கான் இறுதியில் உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். அவரிடம் போதை மருந்து இல்லை, கடத்திய ஆதாரம் இல்லை, போதை மருந்தை சாப்பிட்டதாக ஆதாரம் இல்லை, சதி இல்லை. கைதான முதல் நொடியில் இருந்தே இதைத்தான் கூறி வருகிறோம் என்று மனேஷிண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Shahrukh Khan மகன் Aryan Khan விடுவிக்கப்பட்டார் | Bail Granted, Mumbai Court
     முகுல் ரோஹத்கி ஆஜர்

    முகுல் ரோஹத்கி ஆஜர்

    சதீஷ் மனேஷிண்டே மற்றும் அமித் தேசாய் போன்ற பிரபல வக்கீல்கள் ஷாருக்கான் மகனுக்கான சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றனர். ஜாமீன் கிடைக்காமல் போனதால், ஆர்யனின் வழக்கறிஞர் குழுவில் முகுல் ரோஹத்கி புதிதாக சேர்க்கப்பட்டார். இந்தியாவின் 14வது அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர் முகுல் ரோஹத்கி என்பதால், எப்படியும் தனது திறமையால் ஜாமீன் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது. 3 நாட்கள் தொடர் வாதம் நடத்தினார் முகுல் ரோஹத்கி. இறுதியாக ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+