பாஜகவுக்கு ஒரே ஒரு MP, MLA இருக்கும் வரை இதை நடக்க விட மாட்டோம்.. மகாராஷ்டிராவில் சூளுரைத்த அமித் ஷா
மும்பை: "பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ அல்லது நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி இருக்கும் வரை மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர விட மாட்டோம்." என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆக்ரோஷமாக பேசி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றன.

பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஜல்கானில் உள்ள ராவர் சட்டமன்றத் தொகுதி, புல்தானாவில் உள்ள மல்காபூர் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார் அமித் ஷார்.
அப்போது பேசிய அமித் ஷா, "காங்கிரஸ் கட்சி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. மகாராஷ்டிராவில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. உலமா கவுன்சில் கோரியபடி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் ஒப்புக்கொண்டுள்ளார்.
மகா விகாஸ் அகாதி தலைவர்களின் அதிகார மோகம், விளிம்புநிலை சமூகங்கள் மீதான நீண்டகால மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக அவர்களை தள்ளியுள்ளது. பாஜக அனைத்து சமூகங்களின் நலனிலும் உறுதியாக உள்ளது, ஆனால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மகாராஷ்டிராவில் ஒருபோதும் மகா விகாஸ் அகாதி அரசு அமைக்காது. பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கும் வரை மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அவர்களால் கொண்டு வரவே முடியாது.
மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் தங்கள் அதிகார மோக அரசியலால் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் வாக்குகளுக்காக தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துகின்றனர். காங்கிரஸ் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், ராமர் கோயில் கட்டுவதை பல தசாப்தங்களாக எதிர்த்தனர். நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான், அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டுவதன் மூலம் பிரச்சனை தீர்க்கப்பட்டது. மகாராஷ்டிரவிற்கான பாஜகவின் பார்வை, சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது" எனப் பேசியுள்ளார் அமித் ஷா.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications