Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாச்சு.. ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து அதிகாரி வான்கடே அதிரடி நீக்கம்..!

போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் வான்கடே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கு விசாரணையிலிருந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் வான்கடே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பாக, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவர்தான், ஆர்யன்கானை கைது செய்தவர் ஆவார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான் கானுக்கு கடந்த 28ம் தேதி மும்பை ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது... இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் பல்வேறு வழக்குகளில் அவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்..

நீக்கம்

நீக்கம்

அதுமட்டுமல்ல, வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் ரஃகோஜி சயில் "விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து" என்றும் கூறி பிரமாண பத்திரம் ஒன்றை 2 வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்யன் கான்போதைப் பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார்.. மேலும் ஆர்யான் கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை, வான்கடேவிடம் இருந்து டெல்லியில் உள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

அந்த குழுவிற்கு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விசாரணையில் இருந்து எந்த அதிகாரியும் நீக்கப்படவில்லை என்றும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உதவி செய்வார்கள் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதேபோல ஆர்யன் கான் வழக்கு தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் மற்றும் நடிகர் அர்மான் கோலி ஆகியோர் மீதான வழக்கு விசாரணையும் சமீர் வான்கடேவிடம் இருந்து டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.. இதுகுறித்து வான்கடே கூறும்போது, "இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளேன்.. நான் இதில் இருந்து நீக்கப்படவில்லை. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை இயக்குநராக இருக்கிறேன்" என்று விளக்கம் தந்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து என்சிபி வட்டாரங்கள் சொல்லும்போது, "தேசிய, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற 5 வழக்குகள் மத்திய பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் ஆர்யன் கான் வழக்கும் ஒன்று" என்று தெரிவித்தன. இதனிடையே, இந்த மாற்றம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கிடம் கேட்டதற்கு, "இது ஆரம்பம்தான்" என்று மட்டும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+