மராத்தா சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை ஏற்றது மும்பை ஹைகோர்ட்!
மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகாராஷ்டிரா அரசின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இடஒதுக்கீட்டை 12-13% என குறைத்திருக்கிறது.
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16% வழங்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைத்தது. இதை ஏற்று மகாராஷ்டிரா அரசும் சட்டத்தை நிறைவேற்றியது.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே 52% இடஒதுக்கீடு அமலில் இருந்தது. இப்புதிய அறிவிப்பால் இடஒதுக்கீடு 68% ஆகமாக அதிகரித்தது.
இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%-க்கு மேலே இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் மகாரஷ்டிரா அரசு சட்டம் பிறப்பித்திருப்பதாக மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் பாரதி தாங்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மகாராஷ்டிரா அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு செல்லும் என தீர்ப்பளித்தனர்.
Maharashtra CM Devendra Fadvanis in the state assembly on Maratha reservation: Bombay HC accepted the report of the Backward Class Commission, and also that 50% cap on reservation can be exceeded in exceptional situations. (File pic) pic.twitter.com/mLh34gdebQ
— ANI (@ANI) June 27, 2019
அதே நேரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு என்பதை 12 முதல் 13% இடஒதுக்கீடு வழங்கலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தவிர்க்க இயலாத சூழல்களில் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாகவும் இருக்கலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications