சோனியாவை இழிவுபடுத்திய விவகாரம்- அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை
மும்பை: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்திய விவகாரம் தொடர்பாக ரிபப்ளிக் டிவி உரிமையாளரும் செய்தி ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
மகாராஷ்டிராவின் பால்கரில் சாதுக்கள் இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். குழந்தை திருடும் கும்பல் என சந்தேகித்து சாதுக்கள் இருவரும் அடித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பால்கர் சம்பவத்தின் பின்னணியில் எந்த ஒரு மதமோதலும் இல்லை என கூறியிருந்தார். இது தொடர்பாக தமது ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி விவாதம் ஒன்றை நடத்தினார்.
இந்த விவாதத்தின் போது தேவை இல்லாமல் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவை இழிவுபடுத்தும் வகையில் அர்னாப் கோஸ்வாமி பேசியிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அர்னாப் மீது நாட்டின் பல மாநிலங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதேநேரத்தில் தம் மீது சோனியாவின் தூண்டுதலில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அர்னாப். மேலும் அர்னாப் கோஸ்வாமி தம்மை போலீசார் கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றமும் அர்னாப் கோஸ்வாமிய 3 வார காலம் கைது செய்யாமல் இருக்க தடை விதித்தது.
இந்நிலையில் இன்று காலை மும்பை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் அர்னாப் கோஸ்வாமி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது தமது ரிபப்ளிக் டிவி செய்தியாளர்களிடம் பேசிய அர்னாப் கோஸ்வாமி, உண்மை வெல்லும் என கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications