Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானேவிற்கு பெயில்: நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே இன்று மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறிய நிலையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். இவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களை தொடர்ந்து இவர் மீது 4 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரத்தினகிரி போலீசார் மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.

link revise Union Minister Narayan Rane granted bail by Mahad in Raigad district

அங்கு இவருக்கு எதிராக ஐபிசி 189 (அரசு ஊழியருக்கு காயம் ஏற்படும் அச்சுறுத்தல்), 504 (பொது அமைதியை குலைக்கும் விதமாக வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 505 (தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இவர் தன் மீதான எப்ஐஆரை நீக்க வேண்டும் என்று மும்பை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கை மும்பை ஹைகோர்ட் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இவர் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே மும்பையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹாத் நீதிமன்றத்தில் போலீசார் இவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதில் நாராயண் ரானே வழக்கறிஞர்கள், நாராயண் ரானேவின் உடல்நிலையை காரணம் காட்டி பெயில் கேட்டனர். அதோடு இந்த கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று வாதம் வைத்தனர். மாறாக இவரை 7 நாள் காவலில் எடுக்க மஹாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

link revise Union Minister Narayan Rane granted bail by Mahad in Raigad district

வழக்கு பின்னணி:

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.

இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூட அவருக்கு தெரியாமல் உதவியாளரிடம் கேட்கிறார். அவர் இப்படி பேசும் போது நான் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.

இவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+