50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. சயோன் கோலிவாடா பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன்
மும்பை: மகாராஷ்டிராவின் சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதியில் தாம் 40,000 முதல் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக வேட்பாளரான தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன். சயோன் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக மற்றொரு தமிழரான கணேஷ்குமார் களம் காண்கிறார்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பெரும் கவனம் பெற்றுள்ள தொகுதி சயோன் கோலிவாடா. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் சயோன் கோலிவாடா தொகுதி பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களாக தமிழர்களே களம் காண்கின்றனர். பாஜக சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற கேப்டன் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த கணேஷ்குமார் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார்.

2009-ம் ஆண்டு சயோன் கோலிவாடா சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதன் தேவர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கணேஷ் அய்யர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வென்றது. கணேஷ் அய்யருக்கு 3,030 வாக்குகளும் தமிழரான ராமநாதன் தேவருக்கு 1,065 வாக்குகளும் கிடைத்தன.
ஆனால் 2014-ம் ஆண்டு முதல் சயோன் கோலிவாடா தொகுதியின் சரித்திரமே தலைகீழானது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் 40,869 வாக்குகள் பெற்றார். அத்தேர்தலில் 3,738 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளரைத் தோற்கடித்தார் தமிழ்ச்செல்வன்.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சயோன் கோலிவாடா தொகுதி முக்கியத்துவம் பெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மீண்டும் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக மற்றொரு தமிழரான கணேஷ்குமார் யாதவ், காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தமிழ்ச்செல்வன் 54,845, கணேஷ்குமார் யாதவ் 40,894 வாக்குகளைப் பெற்றனர்.13,951 வாக்குகள் வித்தியாசத்தில் 2-வது முறையாக வென்று எம்.எல்.ஏ.வானார் கேப்டன் தமிழ்ச்செல்வன்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜகவின் தமிழ்ச்செல்வனும் காங்கிரஸின் கனேஷ்குமாரும் மோதுகின்றனர். இதனால் சயோன் கோலிவாடா தொகுதி கவனம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் கேப்டன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், இத்தொகுதியில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் என்னை பிரசாரத்துக்கே நீங்கள் வரவேண்டாம்.. நாங்களே உங்களுக்காக பிரசாரம் செய்கிறோம் என்கின்றனர். இந்த முறை 40,000 முதல் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி விரக்தியில் இருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என பேசுகிறது. பிரதமர் மோடி இந்திய அரசியல் சாசனத்தை நம்புகிறார். அரசியல் சாசனத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளார் என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications