மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு
மும்பை: மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் அண்மையில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காங்கிரஸ் எம்.எல்.சி. சரத் ரன்பைசி எழுப்பிய கேள்விக்கு அமைச்சரும் மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக் அளித்த பதில்:
மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய சட்டசபை கூட்டத் தொடர் முடிவதற்குள் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். முந்தைய பாஜக அரசில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.
இதையடுத்து விரைவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டுவரும் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கியது முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி அரசு. இதில் தலையிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொண்ட போதும் அதை 13%ஆக குறைத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி, இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 13% இடஒதுக்கீட்டை மும்பை உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications