Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்த நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!

ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுடன் குதிரை சவாரி செய்த போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் (23). இவர் தனது கல்லூரி தோழியை கடந்த வாரம்தான் திருமணம் செய்து கொண்டார்.

இதேபோல, காஷிப் இம்தியாஸின் நண்பருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இதையடுத்து, இரண்டு புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு எங்கேயாவது செல்லலாம் என முடிவெடுத்தனர்.

குதிரை சவாரி

குதிரை சவாரி

கோவா, சிம்லா உள்ளிட்ட பல பகுதிகளை யோசித்த அவர்கள், இறுதியாக மகாராஷ்ட்ராவில் உள்ள மாதேரன் பகுதிக்கு சென்று தேனிலவை கழிக்க முடிவு செய்தனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் காரிலேயே மாதேரனுக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், அங்கு மிகவும் புகழ்பெற்ற குதிரை சவாரியில் செல்ல ஆசைப்பட்டுள்ளனர்.

கடிவாளத்தை வேகமாக இழுத்தார்

கடிவாளத்தை வேகமாக இழுத்தார்

அதன்படி, இரண்டு தம்பதிகளான 4 பேர் தனித்தனியாக குதிரைகளில் ஏறி சவாரி சென்றனர். முதலில் அனைவரின் குதிரைகளும் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், முகமது இம்தியாஸ் குதிரையின் கடிவாளத்தை வேகமாக இழுத்திருக்கிறார். இதையடுத்து, அவரது குதிரை மட்டும் வேகமாக ஓட தொடங்கியது. ஆனால், இம்தியாஸுக்கோ குதிரையின் வேகத்தை குறைக்க தெரியவில்லை.

தலையில் மிதித்த குதிரை

தலையில் மிதித்த குதிரை

ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார். இதில், குதிரை தனது கால்களை கொண்டு அவரது முகம், தலை, நெஞ்சு ஆகிய இடங்களில் பலமாக மிதித்தது. இதனால் தலையில் இருந்து அவருக்கு ரத்தம் கொட்டி அங்கேயே அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரது நண்பரும், அங்கிருந்தவர்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஒரு வாரத்தில் தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. சுற்றுலா செல்பவர்கள் குதிரை சவாரியின் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலானோர் இதை கடைப்பிடிக்காததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக போலீஸார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+