தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்த நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!
ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார்.
மும்பை: தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுடன் குதிரை சவாரி செய்த போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் (23). இவர் தனது கல்லூரி தோழியை கடந்த வாரம்தான் திருமணம் செய்து கொண்டார்.
இதேபோல, காஷிப் இம்தியாஸின் நண்பருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இதையடுத்து, இரண்டு புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு எங்கேயாவது செல்லலாம் என முடிவெடுத்தனர்.

குதிரை சவாரி
கோவா, சிம்லா உள்ளிட்ட பல பகுதிகளை யோசித்த அவர்கள், இறுதியாக மகாராஷ்ட்ராவில் உள்ள மாதேரன் பகுதிக்கு சென்று தேனிலவை கழிக்க முடிவு செய்தனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் காரிலேயே மாதேரனுக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், அங்கு மிகவும் புகழ்பெற்ற குதிரை சவாரியில் செல்ல ஆசைப்பட்டுள்ளனர்.

கடிவாளத்தை வேகமாக இழுத்தார்
அதன்படி, இரண்டு தம்பதிகளான 4 பேர் தனித்தனியாக குதிரைகளில் ஏறி சவாரி சென்றனர். முதலில் அனைவரின் குதிரைகளும் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், முகமது இம்தியாஸ் குதிரையின் கடிவாளத்தை வேகமாக இழுத்திருக்கிறார். இதையடுத்து, அவரது குதிரை மட்டும் வேகமாக ஓட தொடங்கியது. ஆனால், இம்தியாஸுக்கோ குதிரையின் வேகத்தை குறைக்க தெரியவில்லை.

தலையில் மிதித்த குதிரை
ஒருகட்டத்தில், தறிகெட்டு ஓடிய குதிரையில் இருந்து இம்தியாஸ் கீழே விழுந்தார். அப்போது குதிரையின் கால்களில் அவர் சிக்கிக் கொண்டார். இதில், குதிரை தனது கால்களை கொண்டு அவரது முகம், தலை, நெஞ்சு ஆகிய இடங்களில் பலமாக மிதித்தது. இதனால் தலையில் இருந்து அவருக்கு ரத்தம் கொட்டி அங்கேயே அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, அவரது நண்பரும், அங்கிருந்தவர்களும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெரும் சோகம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஒரு வாரத்தில் தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. சுற்றுலா செல்பவர்கள் குதிரை சவாரியின் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலானோர் இதை கடைப்பிடிக்காததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications