தனஸ்ரீ வர்மா அல்ல.. 2 ஆண்டுகளாக காதலில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்.. தங்கையால் வெளிவந்த சீக்ரெட்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐடி ஊழியரான த்ரிஷா குல்கர்னி என்பவருடன் காதலில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், அதனை இதுவரை ரகசியமாகவே பாதுகாத்து வந்துள்ளார். இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் தங்கையுடன் த்ரிஷா குல்கர்னி நெருக்கம் காட்டி வந்த நிலையில், ரகசியம் வெளி வந்துள்ளது.
அண்மையில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் விவாகரத்து பெற்றனர். 18 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். தனஸ்ரீ வர்மா விவகாரத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயரே காரணம் என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவருடன் காதலில் உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரின் சகோதரி இருவரும் இன்ஸ்டாகிராமில் த்ரிஷா குல்கர்னி என்ற பெண்ணை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்தான் ஸ்ரேயாஸ் ஐயரின் காதலி என்று தெரிய வந்துள்ளது.
இவர் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது மும்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஜெர்சி அணிந்து ஆதரவு அளித்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கேகேஆர் அணியின் ஜெர்சியுடன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வெளிப்படையாக வைக்கவில்லை.
இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஸ்டா ஐயருடன் நெருக்கமாக நட்பில் இருப்பவர் த்ரிஷா குல்கர்னி. இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயரின் கைகளை பிடித்து த்ரிஷா குல்கர்னி இருக்கும் புகைப்படங்களும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன. த்ரிஷா குல்கர்னி ஐடி மற்றும் ஏஐ தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், நாவல்கள் படிப்பது, சைக்கிளிங் செல்வதிலும் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை ஷர்துல் தாக்கூர் தனது மனைவியுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் தனது காதலி த்ரிஷா குல்கர்னியுடனும் சந்தித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் வெளியான போதே ஸ்ரேயாஸ் ஐயர் காதலில் இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் காதலில் இருப்பது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications