டிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு
மும்பை: பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்து தங்களது டிஆர்பியை அதிகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டிய நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க ரிபப்ளிக் டிவி முடிவு செய்துள்ளது.
விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதுதொடர்பாக இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒருவர் வீடுகளுக்கு செட் டாப் பாக்ஸ் நிறுவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். வீடுகளுக்கு வழங்கும் செட் டாப் பாக்ஸில் தங்கள் சேனலை மட்டுமே மக்கள் அதிகம் பார்ப்பது போல் காட்டி டிஆர்பி ரேட்டிங் மோசடியை நடத்தியதாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மற்றும் இரு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து டிஆர்பியில் தனியார் செய்தி நிறுவனங்களின் தலையீடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. அது போல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எப் ஐ ஆரில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை மும்பை போலீஸாரும், மகாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
News Release: Arnab & Republic to sue Param Bir Singh for Rs. 200 cr, as Maharashtra Govt and Mumbai Police admit in court that Network is not named in the TRP case FIR. pic.twitter.com/iNSoasmyaa
— Republic (@republic) October 19, 2020
இதையடுத்து மும்பை கமிஷனர் பரம்பீர் சிங் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அர்னாப் கோஸ்வாமி முடிவு செய்துள்ளார். அதில் ரூ 100 கோடி அர்னாப் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், ரூ 100 கோடி ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயரை டேமேஜ் செய்த காரணத்திற்காகவும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எஃப் ஐஆரில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படாததால் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான ரிபப்ளிக் டிவி எந்த தவறையும் செய்யவில்லை என தெரியவந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications