போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஆஜரான ரியா சக்கரவர்த்தி.. விசாரணையில் கூறிய பரபரப்பு தகவல் என்ன?
மும்பை: நான் இதுவரை போதை மருந்தை உட்கொண்டதே இல்லை என நடிகை ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ஆராய்ச்சி
ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஆராய்ந்ததில் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறிதது போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

ரியாவின்
ரியாவின் சகோதரர் ஷோயிக் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோரின் வீட்டில் பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு நேற்று அனுப்பப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக போதை பொருளை உட்கொண்டது, போதை பொருளை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆஜர்
இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் ஆஜரானார். அவர் ஏதேனும் மருந்துகளை உட்கொள்கிறாரா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். நான் இதுவரை போதை பொருளை உட்கொண்டதே இல்லை என ரியா பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

காதலிப்பது குற்றம் அல்ல
இதுகுறித்து ரியா செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒருவரை காதலிப்பது குற்றம் அல்ல. காதலுக்காக விளைவுகளை நான் எதிர்கொள்வேன். நிரபராதி என்பதால் நான் முன்ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகவில்லை என்றார். என்சிபி விசாரணையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா திருப்திகரமாக பதில் அளிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications