Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மகன் என்ன பாவம் பண்ணான்? கிரிமினல் மாதிரி நடத்துனாங்க.. வேதனையில் பொங்கிய ஷாருக்கான்!

Subscribe to Oneindia Tamil

மும்பை : தன் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட போது நாங்கள் மிகப்பெரிய கிரிமினல்கள் போல நடத்தப்பட்டதாகவும், அரக்கர்களை போல சித்தரிக்கப்பட்டோம் என நடிகர் ஷாருக்கான் தன்னிடம் கூறியதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்திய இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

ஆர்யன் கான் வழக்கு

ஆர்யன் கான் வழக்கு

இதனையடுத்து நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. முன்னதாக என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, ஆர்யான் கான் கணிசமான அளவு சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், ஆர்யனுக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் ஒரு வழக்கைத் தயாரித்தார். ஆனால் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை,

வழக்கிலிருந்து விடுதலை

வழக்கிலிருந்து விடுதலை

அதாவது ஆர்யன் போதைப் பொருள் வைத்திருந்ததாகவோ, பயன்படுத்தியதாகவோ ஆதரங்களை என்சிபி அதிகாரிகள் சமர்பிக்கப்படவில்லை. இதனையடுத்து ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுகள் மே 28 ஆம் தேதி கைவிடப்பட்டது. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து ஏற்கனவே 28 நாட்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கில் சிறையில் இருந்தபோது ஆர்யன் கான் தன்னிடம் பேசியவை குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆர்யன் வேதனை

ஆர்யன் வேதனை

'ஆரியன் கான் வழக்கிலிருந்து பாடங்கள்' என்ற தலைப்பில் என்சிபியின் துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் சிங் ராஜ் செங்கப்பா, ஆர்யன் கான் மற்றும் ஷாருக்கானுடன் அவர் நடத்திய உரையாடல்களை தற்போது வெளி உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆர்யனை திறந்த மனதுடன் வந்திருப்பதாக உறுதியளித்து வசதியாக இருக்க வைக்க முயற்சித்த பிறகு அவர் தன்னிடம் வெளிப்படையாக பேசியதாக அவர் கூறியுள்ளார். அதில், " நீங்கள் என்னை ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனாக சித்தரித்தீர்கள்,

அதிர்ச்சி கேள்வி

அதிர்ச்சி கேள்வி

நான் போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியளிக்கிறேன் என சொன்னீர்கள், இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானவை இல்லையா? அன்று என்னிடம் போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்தனர். நீங்கள் எனக்கு பெரிய தவறு செய்து என் புகழை கெடுத்துவிட்டீர்கள். நான் ஏன் இத்தனை வாரங்கள் சிறையில் இருந்தேன் - நான் அதற்கு தகுதியானவனா?" என வேதனையுடன் கேட்டுள்ளார்.

 ஷாருக்கான் உருக்கம்

ஷாருக்கான் உருக்கம்

மேலும் மேலும் தன்னுடன் ஆர்யன் கானின் தந்தையான ஷாருக்கான் பேசிய தகவல்கள் குறித்தும் சஞ்சய் சிங் கூறியுள்ளார். பொதுவாக மற்ற கைதிகளின் பெற்றோர்களை சந்திப்பது போலவே தான் ஷாருக் கானை சந்தித்ததாகவும் அப்போது ஆர்யன் சிறை அறையில் இரவு நேரங்களில் சரியாக கூட தூங்க மாட்டார் என சொன்னதாக கூறியுள்ளார். இதையடுத்தே ஆர்யனுடன் ஷாருக்கான் இரவில் தங்கியதாகவும், தனது மகன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இழிவுபடுத்தபட்டுள்ளார் என கூறினார் . மேலும் தங்களை கிரிமினல்கள் போலவும் இந்த சமுதாயத்தை அழிக்க துடிக்கும் அரக்கர்களை போலவும் சித்தரிக்கப்பட்டதாக கண்ணீர் மல்க ஷாருக்கான் கூறியதாகவும்" சஞ்சீவ்குமார் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+