தேர்தலை புரட்டிப்போட்ட நொடி.. கொட்டும் மழையில் பிரச்சாரம்.. சரத் பவார் கற்றுத்தந்த அரசியல் பாடம்!
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்த பிரச்சாரம் ஒன்றுதான் அவருக்கு தற்போது பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்த பிரச்சாரம் ஒன்றுதான் அந்த கட்சிக்கு தற்போது பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அதே சமயம் பெரிய வெற்றியை ருசிக்கும் என்று கருதப்பட்ட பாஜக கூட்டணி 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவோ வெறும் 105 இடங்களில்தான் முன்னிலை வகித்து வருகிறது.

தேசியவாத காங்கிரஸ்
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வரிசையாக பலர் வெளியேறினார்கள். முக்கிய உறுப்பினர்கள் பலர் கட்சிக்குள் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று புகார் கூறி கட்சியை விட்டு வெளியேறினார்கள். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார்.

சத்தாரா தொகுதி
தன்னுடைய சத்தாரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் மாரத்தா அரசின் 13வது சத்திரபதியாக உதயன்ராஜே போஸ்லேதான் முடி சூடினார்.

ஏற்பாடு
இதனால் அவருக்கு மகாராஷ்டிராவில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருந்தது. இவர் பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியை மொத்தமாக முடக்கியது. அதோடு மீண்டும் அதே சத்தாரா தொகுதியில் உதயன்ராஜே போஸ்லே பாஜக சார்பாக இந்தமுறை நின்றார்.

யார் போட்டி
தேசியவாத காங்கிரஸ் சார்பாக அங்கு ஸ்ரீனிவாஸ் பாட்டீல் நின்றார். இந்த தேர்தல் பிரச்சாரம் மொத்தமும் மகாராஷ்டிராவில் உதயன்ராஜே போஸ்லேவை வைத்துதான் உருவாக்கப்பட்டது. பாஜக இவரை பெரிய அளவில் பயன்படுத்தியது.

மகாராஷ்டிரா அரசியல்
தேசியவாத காங்கிரஸ் தோற்க போகிறது. உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தே அதன் தொடக்கம் என்று கூட பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பலரும் கூட இதே கருத்தைதான் சொன்னார்கள். ஆனால் அன்று அந்த நாள் வந்தது.. மகாராஷ்டிரா அரசியல் மொத்தமாக அன்று மாலை மாறியது.

அந்த நாள்
எல்லோரும் பாஜகவின் உதயன்ராஜே போஸ்லேதான் வெல்வார் என்று உறுதியாக நம்பிய போதுதான் சரத் பவார் அக்டோபர் 19ம் மாலை தன்னுடைய பிரச்சாரத்தை சத்தாரா தொகுதியில் மேற்கொண்டார். உதயன்ராஜே போஸ்லே குறித்தும் பாஜக குறித்தும் மாறி மாறி பேசினார்.

மழை பெய்தது
சரியாக அப்போது மழை பெய்ய துவங்கியது. கட்சி உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து செல்ல முயன்ற போது, கொஞ்சமும் அசையாமல், கெத்தாக மழையில் நின்றபடியே சரத் பவார் பிரச்சாரம் செய்தார். மழையில் கலைந்த கூட்டம் எல்லாம் மீண்டும் வந்தது. கூட்டம் மட்டுமல்ல ஓட்டும்தான். அவரின் அந்த பேச்சு, கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தை புரட்டிப்போட்டது.

அட முன்னிலை
இப்போது உதயன்ராஜே போஸ்லே சத்தாரா தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னணியில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் வெற்றியை நெருங்கி கொண்டு உள்ளார். 30 இடங்கள் கூட வெல்லாது என்று கருதப்பட்ட தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

என்ன பாடம்
இதற்கு எல்லாம் காரணம் சரத் பவார்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். எல்லோரும் அவரின் அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்ன போதும் அவர் தனது பணியை மேற்கொண்டார். மழையில் கூட கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.. தற்போது வென்றும்விட்டார். அவரிடம் ராகுல் காந்தி தொடங்கி சோனியா காந்தி வரை கற்க வேண்டிய அரசியல் பாடம் நிறைய இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications