கொரோனாவுக்கு உலக அளவில் 60,25,259 பேர் பலி - 38 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 60,25,259 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 44,76,41,811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38,12,60,714 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 70,530 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 60,25,259 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 11,66,541பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 44,77,00,250 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 17,09,823 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 38,14,34,513 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,782பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 60,26,740 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 3,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515,241 பேராக அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications