Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூலப்பத்திரம்.. நாகப்பட்டினம் அருகே சோழர் கால செப்பு பட்டயத்தால் முதியவர் சொத்தை மீட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: இன்றை சூழலில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரிப்பது அதிகரித்துள்ளது.இதனால் சொத்துக்களின் உண்மையான வாரிசுகளை அறிவதற்கு மூலப்பத்திரம், பூர்வீகமாக சொத்து யார் பெயரில் இருந்தது என ஆராய்ந்து தான் சொத்துக்களின் உண்மையான உரிமையாளரை அதிகாரிகள் உறுதி செய்கிறார்கள். இந்நிலையில் நாகை அருகே சோழர் கால செப்பு பட்டயத்தை வைத்து சொத்தை மீட்டிருக்கிறார் ஒரு முதியவர்.

தமிழ்நாடு மிக வேகமாக நகரமயமாகி வருகிறது. இதன் காரணமாக நகர்புறங்களில், நகரத்தை ஒட்டிய பகுதிகளில் நிலத்தில் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்தாலும், நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வது அதைவிட வேகமாக அதிகரித்து வருகிறது.

How did an old man recover property near Nagapattinam using a Chola-era copper sword

நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்வதும், பட்டா வாங்க முயற்சிப்பதும் அதிகமாக நடக்கிறது. நிலத்தை வாங்கிப்போட்டு அதை கவனிக்காமல் இருப்பவர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. போலி ஆதார், போலி வாரிசு சான்றிதழ், போலி உயில் சாசனங்கள் எழுதி மோசடி செய்து பத்திரப்பதிவு செய்வது அடிக்கடி நடக்கிறது.

இப்படி நடந்த மோசடியை நிலம் வாங்கியவரே வில்லங்கம் உள்ளதா என்பதை ஆன்லைனில் ஈஸி போட்டு பார்த்தால் தான் கண்டுபிடிக்க முடியும். அவர் கவனிக்காமல் விட்டுவிட்டால், அல்லது 10 வருடம் அல்லது 15 வருடம் கழித்து பார்த்தால் அங்கு வேறு யாராவது குடியிருப்பார்கள். அவர்களை வெளியேற்ற முடியாத அளவிற்கு பத்திரம் பல கைகளுக்கு மாறி இருக்கும். இது போன்ற விலங்கங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்த 79 வயதாகும் ராதாகிருஷ்ணன் , கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம். இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்திருக்கிறார். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதியவர் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார்.

இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் தனது நிலத்தை முதியவர் மீட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+