தோப்புக்கு தூக்கிட்டு போனேன்.. கழுத்தை நெரித்தேன்.. சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது

10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது

    நாகை: "பிரியாவின் வாயை பொத்தி நான்தான் காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனேன்.. பலாத்காரம் செய்தேன்.. சத்தம் போடவும், அவளது தொண்டையை நெரித்து கொன்று விட்டேன்" என்று கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வாக்குமூலம் தந்துள்ளார்.

    சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த சிறுமி பிரியா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் ஸ்கூல் விட்டு வந்த பிரியா, தோப்பு பக்கம் மாலை நேரத்தில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பயந்து போன பெற்றோர் அவளை தேடி தோப்புக்கு சென்றனர். அப்போதுதான், பிரியாவின் கழுத்து, தலை, தோள்பட்டைகளில் ரத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தாள்.

     டாக்டர்கள்

    டாக்டர்கள்

    பதறி போன பெற்றோர், மகளை தூக்கி கொண்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். உடலில் ஏற்பட்ட காயங்களை வைத்து, பிரியாவை யாரேனும் பலாத்காரம் செய்து, பின்னர் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

     கல்யாண சுந்தரம்

    கல்யாண சுந்தரம்

    பின்னர், பிரியாவின் பக்கத்து வீட்டுக்காரர் கல்யாணம் சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். இவருக்கு 30 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்க்கிறார். அதில் சிறுமியை கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

     பலாத்காரம்

    பலாத்காரம்

    ''ரொம்ப நாளாகவே பிரியா மீது ஒரு கண் இருந்தது. சம்பவத்தன்று சாயங்காலம், தோப்புக்கு பிரியா போவதை பார்த்தேன். நானும் பின்னாடியே வாயை பொத்தி, காட்டுப்பகுதிக்கு இழுத்துட்டு போனேன்.. அங்கதான் பிரியாவை பலாத்காரம் செய்தேன்.. அப்போ சத்தம் போட்டு கத்தவும், நான் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்" என்றார்.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இதில் என்ன ஒரு கொடுமை என்றால், தோப்பில் விழுந்து கிடந்த மகளை பெற்றவர்கள் தூக்கி கொண்டு ஓடும்போது, கல்யாணசுந்தரமும் கூடவே சென்றுள்ளார். சும்மா போகாமல், "என் தங்கச்சியை இப்படி செய்துட்டாங்களே" என்று கதறி அழுது கொண்டே சென்றுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து கல்யாண சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+