நாகையில் சுற்றுலா வந்த வேன் தலைகீழ் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம்
நாகப்பட்டினம்: நாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை நண்பர்களுடன் சுற்றுலா வந்த மருத்துவர் ஞானசேகரன் என்பவர் முதலுதவி அளித்து காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மருத்துவரின் செயலை பலரும் பாராட்டினார்கள்.
கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலர் ஆர்வமுடன் செல்கிறார்கள்.

நாகூர் தர்கா
கடலூர் மாவட்டம் லால்பேட்டை 10க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் சுற்றுலா வந்தனர். நாகூர் தர்காவில் வழிபாடு முடிந்த பின்னர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றனர்.

வாய்க்கால்
அப்போது கருவேலங்கடை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகீழ் கவிழ்ந்தது.

பொதுமக்கள்
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தலைகீழாக கவிழ்ந்த வேனில் சிக்கியவர்களை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
இதனிடையே விபத்து நடந்த வழியாக நண்பர்களோடு வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற மருத்துவர் ஞானசேகர் என்பவர் அனைவருக்கும் முதலுதவி பார்த்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பும் வரை உதவி செய்தார். இந்த நிலையில் விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications