"வெளிச்சத்தில்" நாகை.. வாழைப்பழத்தை வீசிய ராதாகிருஷ்ண சாமியார்.. மலைத்த "மாப்பிள்ளை வீரன்".. சூப்பர்
நாகை: நாகையில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்று, இணையத்தில் வைரலாகி பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
விநோத திருவிழாக்கள் என்பது, நம்முடைய தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. உதாரணத்துக்கு, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என்று தனித்தனியாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

பனை இலைகள்: அதேபோல, பனை இலையில் கறிசோறு போடும் திருவிழா, வாழைப்பழம் வீசும் திருவிழா, உடம்பெல்லாம் சேறு பூசி ஆடும் திருவிழா என்று இன்னும் ஏராளமான திருவிழாக்கள் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம்கூட, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியிலுள்ள பொன்னழகி அம்மன் கோயிலில் விநோத திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்த கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது.. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக் கொள்வார்கள்..
கோழி இறகு: பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்களாம். இதனால், கிராம மக்களுக்கு நலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
நேற்றுகூட, நாகையில் பங்குனி திருவிழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.. நாகை தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் முக்கியமாக, இந்த விழாவில், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசுவது முக்கிய நிகழ்வாக உள்ளது.
பைரவர் கோவில்: முன்னதாக, தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை சுமார் 5 கிமீ தூரத்துக்கு கொண்டு வரப்பட்டு கொண்டுவரப்பட்டது.. பிறகு பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி ஆரம்பமானது.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சாப்பிட்டனர்.
அதாவது, சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.. இன்று காலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உருவ பொம்மைகள்: கோவில் வளாகத்திலும், ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.. இதற்காக ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பிறகு, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா நிகழ்வுகள் அத்தனையும் இணையத்தில் வீடியோவாகவும் வெளிவந்து பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications